ராகம்: செஞ்சுரீடி 
மாடுமேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன் 
காய்சின பாலு தரேன் கல்கண்டு சீனி தரேன் 
கைநிறைய வெண்ணை தரேன் வெய்யிலிலே போக வேண்டாம் (மாடு)
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒருநொடியில் திரும்பிடுவேன் 
போகவேணும் தாயே தடை சொல்லாதே நீயே 
யமுனா நதி கரையில் எப்பொழுதும் கள்வர்பயம் 
கள்வர் வந்து உனை அதித்தல் கலங்கிடுவாய் கண்மணியே (மாடு)
கள்வர் வந்து எனை அடித்தல் கண்டதுண்டம் செய்திடுவேன் 
போகவேணும் தாயே தடை சொல்லாதே நீயே 
கோவர்தனகிரியில் கோரமான மிருகங்கள் உண்டு 
கரடி புலியை கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
காட்டு ம்ருகங்களெல்லாம் என்னை கண்டால் ஓடி வரும் 
கூட்ட கூட்டமாக வந்தால் வேட்டையாடி ஜெயித்திடுவேன் 
போகவேணும் தாயே தடை சொல்லாதே நீயே 
பட்சமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டல் 
என்ன பதில் சொல்லவேண்ட என்னுடைய கண்மணியே (மாடு)
பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன் 
தேடியே  நீ வருகையிலே ஓடிவந்து நின்றிடுவேன் 
போகவேணும் தாயே தடை சொல்லாதே நீயே (மாடு)
 
No comments:
Post a Comment